இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் மீண்டும் இணையப்போவதாக நாயகன் தனுஷ் கூறியுள்ளார்.
கொலிவுட்டில் தனுஷ் – யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து பணியாற்றிய படங்களில் அனைத்து பாடல்களுமே திரையுலகில் வரவேற்பை பெற்றன.
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய படங்களில் இருவரும் இணைந்திருந்தார்கள். அதற்கு பிறகு எந்த ஒரு படத்திலும் இவர்கள் இணையவில்லை.
இந்நிலையில் இருவரும் மீண்டும் இணைவார்களா என்று திரையுலகில் பேச்சுகள் நிலவின.
யுவன் குறித்தும் தனது அடுத்தடுத்த படங்கள் குறித்தும் தனுஷ் தனது டிவிட்டர் இணையத்தில், எனக்கு யுவனின் இசை மிகவும் பிடிக்கும். என்னுடைய முதல் படத்திற்கு இசையமைத்தவர் என்பதால் யுவன் எப்போதுமே எனக்கு ஸ்பெஷல் தான். விரைவில் அவருடன் இணைந்து பணியாற்ற இருக்கிறேன்.
நிறைய கதைகளை கேட்டு விட்டேன். எந்த படத்தினை ஒப்புக் கொள்வது என்பது குழப்பமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

0 comments: