
நடிகை ஆண்ட்ரியாவும், இசை அமைப்பாளர் அனிருத்தும் முத்தமிட்ட படங்கள் சமீபத்தில் வெளியாயின. இந்த படங்கள் 18 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டவை என்றும், அப்போது இருவருக்கும் நெருக்கமான உறவு இருந்தது என்றும் ஆன்ட்ரியா கூறினார். காலப்போக்கில் அந்த உறவு முறிந்துவிட்டது என்றும் தெரிவித்தார்.
இந்த படங்கள் குறித்து அனிருத் அளித்த பேட்டி வருமாறு:-
ஆன்ட்ரியாவும், நானும் முத்தமிட்ட படங்கள் எனது செல்போனில் இருந்தன. அதை யாரோ எனக்கு தெரியாமல் தங்களது போனில் டவுன் லோடு செய்து வெளியிட்டு விட்டனர். எனக்கென்று தனிப்பட்ட சொந்த வாழ்க்கை இருக்கிறது. அதை இப்படி பகிரங்கப்படுத்தி விமர்சிப்பது வருத்தம் அளிக்கிறது.
அது பழைய படம். இப்போது வெளிவந்து இருக்கிறது. நான் பார்க்கிற பெண்களையெல்லாம் முத்தமிடுகிறவன் அல்ல. ஏற்கனவே நடந்த தவறுகள் மறுபடியும் நடக்காமல் பார்த்துக் கொள்வேன். நான் பெண்களை மிகவும் மதிப்பவன். இந்த இக்கட்டான நேரத்தில் எனது குடும்பத்தினர் எனக்கு துணையாக இருந்தனர்.
இவ்வாறு அனிருத் கூறினார்...'
.
0 comments: