
துப்பாக்கி படத்தின் தலைப்பு சண்டை இப்போதைக்கு ஓயவே ஓயாது போலிருக்கிறது. இந்த வழக்கை 7 வது முறையாக ஒத்தி வைத்தார் நீதிபதி திருமகள்.
படத்தின் தலைப்பு மீதான இடைக்காலத்தடை வரும் செப்டம்பர் 17-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கள்ளத்துப்பாக்கி படத்தின் தயாரிப்பாளர் சி ரவிதேவன் இந்த வழக்கை தாக்கல் செய்தார். விஜய் நடிக்கும் துப்பாக்கி படத் தலைப்பு மற்றும் டிசைன்கள், தன்னுடைய கள்ளத் துப்பாக்கி தலைப்பு - டிசைனை காப்பியடித்து உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டி இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
தாணு தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி படத்துக்கு இரு மாதங்களுக்கு முன்பு விதிக்கப்பட்ட தடையை இதுவரை 7 முறை நீட்டித்துள்ளார் நீதிபதி. துப்பாக்கி படத் தயாரிப்பாளர் தரப்பில் உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்பது இந்த முறை ஒத்தி வைப்புக்கான காரணம்.
தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் இந்தப் படத்துக்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டு வருவது தயாரிப்பாளர் மற்றும் விஜய் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
0 comments: