• சினிமாவுக்கு வந்ததால் மாப்பிள்ளை கிடைக்கவில்லை: பத்மபிரியா ஏக்கம்



    சினிமாவுக்கு நடிக்க வந்ததால் கல்யாணம் செய்து கொள்ள மாப்பிள்ளை கிடைக்கவில்லை என பிரபல நடிகை பத்மப்ரியா கூறியுள்ளார்.
    இதுகுறித்து அவர் கூறியதாவது, என் அப்பா இராணுவ அதிகாரியாக பணிபுரிந்ததால் அடிக்கடி இடம் மாற வேண்டி இருக்கும்.


    இதனால் எனக்கு நண்பர்கள் குறைவு, புத்தகங்கள்தான் எனக்கு நண்பர்கள். சினிமாவுக்கு வரும் முன்பு மல்ட்டி நேஷனல் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அங்கேயே வேலை பார்த்திருந்தால், இத்தனை நேரம் நல்ல இடத்தில் மாப்பிள்ளை கிடைத்து திருமணமாகி செட்டில் ஆகியிருப்பேன்.

    சினிமாவுக்கு வந்த பிறகு வெளியுலக தொடர்பு குறைந்துவிட்டது. பெரும்பாலான நேரம் படப்பிடிப்புகளிலும், மற்ற நேரம் ஓட்டல் அறைகளிலுமே கழிகிறது. சினிமாவை பொருத்தவரை மம்மூட்டி, மோகன்லால், திலிப், பிருத்விராஜ், ஜெயராம் போன்றவர்களுடன் நடிக்கிறேன்.

    எல்லோருமே திருமணம் ஆனவர்கள். சினிமாவில் எனக்கு பொருத்தமான மாப்பிள்ளை யாரும் இல்லை. பொருளாதார சுதந்திரம் மட்டுமே எல்லா சுதந்திரத்தையும், முழு மகிழ்ச்சியையும் கொடுத்துவிடாது.

    வேலைக்கு போகும் பெண்கள் வீட்டுக்கு வந்ததும் தினசரி வேலைகளை கவனிக்க வேண்டி உள்ளது. இதில் கொடுமை என்னவென்றால் அந்த பெண்ணுக்கு இரவில்தான் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்கும்.

    எந்த ஆணும் குண்டான மனைவியை பார்ட்டிகளுக்கு அழைத்து செல்ல விரும்பவதில்லை. அதேநேரம் வீட்டு வேலையை பகிர்ந்துகொள்ளவும் பல ஆண்கள் முன்வருவதில்லை என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment