நாடோடிகள் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான அனன்யாவுக்கும், கேரள தொழில் அதிபர் ஆஞ்சநேயனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது. விரைவில் திருமணம் நடக்கும் என்று எதிர்ப்பார்த்திருந்தனர் பட உலகினர்.
இந்நிலையில் ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவர் என்ற தகவல் வெளியானது. இதையடுத்து அனன்யாவின் தந்தை ஆஞ்சநேயன் மீது போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரில், முதல் திருமணத்தை மறைத்து என் மகளை மணக்க முயற்சித்த ஆஞ்சநேயன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். போலீசார் இது பற்றி ஆஞ்சநேயனிடம் விசாரணை நடத்திய போது, தனது முதல் மனைவியை விவகாரத்து செய்ய கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருப்பதாக தெரிவித்தார். ஆஞ்சநேயனிடம் விசாரனை நடந்து கொண்டிருந்த நிலையில், ”ஆஞ்சநேயனை தான் மணப்பேன் என்றும், நிச்சயதித்தப் படி எங்களுடைய திருமணம் நடக்கும்” என்று அனன்யா அறிவித்தார்.
ஆனால் தற்போது அனன்யாவிடம் மனமாற்றம் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருமணத்தை அவர் நிறுத்திவிட்டதாகவும், மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி அவர் கூறும்போது, ''திருமணம் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. அஜீத், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆசைப்படுகிறேன். சினிமாவில் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது” என்று கூறியுள்ளார். அனன்யா இப்படி திடீர் பல்டி அடித்து இருப்பதால், ஆஞ்சநேயனை அதிர்ச்சி குள்ளாக்கியுள்ளது.
0 comments: