மறுஜென்ம படம் ஒன்றில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து நான் ஈ பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி கூறியதாவது: வழக்கமான மசாலா பாணியில் இல்லாமல் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட கதை தான் நான் ஈ.
வில்லனால் கொல்லப்படும் நாயகன் மறுஜென்மத்தில் ஈஆக பிறக்கிறான்.
தனது முற்பிறவியில் நடந்தவை அவனுக்கு நினைவில் உள்ளது. இந்நிலையில் வில்லனை சித்ரவதை செய்து எப்படி பழி தீர்க்கிறான் என்பது மீதிக்கதை.
இது கற்பனை கதையாக மட்டுமல்லாமல் நகைச்சுவை அம்சம் கொண்ட படமாகும். நானி, சுதீப், சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
தெலுங்கில் மகதீரா, எமதொங்கா ஆகிய படங்களை இயக்கி உள்ளேன். இப்படம் தமிழ், தெலுங்கில் உருவாகிறது. தெலுங்கில் ஈகா என பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்துக்காக தென்னிந்தியாவில் முதல் முறையாக ஸ்கார்பியோ கிரேன் இப்படத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, போலந்தில் ஸ்பெஷல் எபெக்ட் செய்யப்படுகிறது. மொத்த பட்ஜெட் ரூ.40 கோடியில் 50 சதவீதம் விஷுவல் எபெக்ட்ஸுக்காக செலவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்..

0 comments: