• சித்தார்த்தை விட்டு பிரிந்து விட்டேனா? ஸ்ருதி விளக்கம்



    நடிகர் சித்தார்த்தை விட்டு பிரிந்து விட்டதாக கூறப்படுவது குறித்து ஸ்ருதி ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
    ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்திருக்கும் படம் 3 எதிர்வரும் 30 திகதி வெளியாக உள்ளது.


    இப்படத்தில் நடித்தபோது தனுஷுக்கும், ஸ்ருதி ஹாசனுக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக தகவல் பரவியது.

    அதே போன்று பாய்ஸ் பட ஹீரோ சித்தார்த்துடன் ஸ்ருதி ஹாசன் சேர்ந்து வாழ்ந்ததாக கூறப்பட்டது. இப்போது அவர்கள் பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் ஐதராபாத்தில் 3 தெலுங்கு பதிப்பின் பாடல் கேசட் வெளியீட்டு விழா நடந்தது. இதன்பின் நிருபர்களிடம் ஸ்ருதி கூறியது, 3 படத்தில் எனது வேடம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த பாத்திரமாகவே மாறிவிட்டேன். இது எனக்கு சவாலாக அமைந்தது.

    இதற்கு முன்பு எந்த எல்லைக்குட்பட்டு நடித்துக் கொண்டிருந்தேனோ அந்த எல்லைகளை தாண்டிய நடிப்பை தரவேண்டி இருந்தது. அது எனக்கு சந்தோஷம். இப்படத்தில் நடித்தபோது தனுஷுக்கும் எனக்கும் காதல் ஏற்பட்டதாக வதந்திகள் பரவியது.

    தனுஷ் எனக்கு நல்ல நண்பர். அடக்கமானவர். அவருடன் என்னை இணைத்து வந்த வதந்திகள் எல்லாமே தவறானவை.

    சித்தார்த்தை விட்டு நான் பிரிந்து விட்டதாக சொல்கிறார்கள். எனக்கும் சித்தார்த்துக்கும் எந்த உறவும் கிடையாது. என்னைப் போல் அவரும் நடிகர். அவ்வளவுதான் என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment