நடிகை ஸ்ரேயா இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் கவர்ச்சியாக ஒரு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருந்தார். போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே இப்படி போஸ் கொடுத்தேன் என்று ஸ்ரேயா கூறியுள்ளார்.
கவர்ச்சி புகைப்படம்
நடிகை ஸ்ரேயா ஒரு பத்திரிகைக்காக இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்தார். மேலாடை இல்லாமல் படுக்கையில் படுத்தபடி இருக்கும் இந்த புகைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு படவுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கவர்ச்சியாக போஸ் கொடுத்தது மட்டுமின்றி தனது சினிமா வாழ்க்கையில் இதுதான் சிறந்த புகைப்பட பிடிப்பு என்றும் ஸ்ரேயா கூறியிருந்தார்.
நடிகை ஸ்ரேயாவிடம், `திடீரென இப்படி மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுக்கக் காரணம் என்ன' என்று கேட்டபோது அவர் கூறியதாவது:-
சினிமாவில் நீடிக்கவே
"தற்போது உள்ள போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்க வேண்டுமானால் இந்த அளவிற்கு சாகசம் செய்வதில் தவறில்லை என எனக்கு தோன்றியது. எனக்குள்ளே இருக்கும் `கிளாமர்' என்ன என்பதை காட்டவே இப்படி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தேன்.
அந்த பத்திரிகைக்கு போஸ் கொடுப்பது எனக்கு ஒன்றும் புதிதல்ல. இது இரண்டாவது முறை. முதல் முறை புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த பின்னர் எனக்கு எத்தனையோ படவாய்ப்புகள் வந்தன. பாலிவுட்டில் கூட பல வாய்ப்புகளை பெற்றுத் தந்தது.
படவாய்ப்புகளை கொடுக்கும்
இந்த இரண்டாவது புகைப்பட ஷூட் எனக்கு மேலும் வேகமாக படவாய்ப்புகளை கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
நடிகையாக நான் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. எனவே திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. என் வயது 30. இது பெரிய வயது என நான் எண்ணவில்லை. ஹாலிவுட்டில் ஹீரோயின்கள் சினிமாவிற்கு வருவதே 30 வயதில் தான். தற்போது பாலிவுட்டிலும் 30 வயதை தாண்டிய ஹீரோயின்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களைவிட நான் சிறியவள் தான்.''
இவ்வாறு நடிகை ஸ்ரேயா கூறினார்.
0 comments: