இயக்குனர் சிகரம் மணிரத்தினம் படமான ராவணன் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார் ப்ரியாமணி. இதை அடுத்து ராம்கோபால் வர்மாவின் ரத்த சரித்திரம் படத்திலும் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
தற்போது இந்தியில் நடிகை ஜெனிலியாவின் கணவர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்து நடிகை ப்ரியாமணி கூறியதாவது :
“சமீபத்தில் நடிகை ஜெனிலியா-ரித்தேஷ் தேஷ்முக் திருமணம் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. டைரக்டர் சந்திரகாந்த் சிங் இயக்கும் புதிய படத்தில், ஜெனியாவின் கணவரும், பாலிவுட்டின் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக்குடன் ஜோடியாக நடிக்க இருக்கிறேன். இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. விரைவில் இப்படத்தின் சூட்டிங் ஆரம்பமாக உள்ளது. விரைவில் வெளியாகவிருக்கும் ‘தேரே நாள் லவ் ஹோ கயா’ படத்தின் புரமோஷன் வேலைகளில் படு பிஸியாக உள்ளார் ரித்தேஷ். இப்படத்தை முடித்த பிறகு சந்திரகாந்த் சிங் இயக்கும் படத்தில் ரித்தேஷ் நடிப்பார் எனத்தெரிகிறது” என்று கூறினார்.

0 comments: